இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்களை கடத்திய நபர் கைது!

 

இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்களை கடத்திய நபர் கைது!

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்களை கடத்திய நபரை, தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக மடக்கிப் பிடித்தனர்.

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள வடபூண்டி கிராமத்தில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர், அதிகாரிகளை கண்டதும் தப்பியோட முயன்றார். இதனால் அதிகாரிகள், அவரை வாகனத்தில் விரட்டி பிடித்து சோதனை நடத்தினர்.

இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்களை கடத்திய நபர் கைது!

அப்போது, வாகனத்தில் ஏராளமான மதுபாட்டில்களை கடத்திச் சென்றது தெரியவந்தது. இது குறித்து, அதிகாரிகளின் விசாரணையில் அவர் கண்டாச்சிமங்கலம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பதும், அவர் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கி சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதனை அடுத்து, ராஜேந்திரனிடம் இருந்த 190 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள், அவரை கள்ளக்குறிச்சி சார் ஆட்சியரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, அவர் மீது கள்ளக்குறிச்சி மதுவிலக்கு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து கைதுசெய்தனர்.