பணம் பட்டுவாடா புகார்… மொடக்குறிச்சி திமுக வேட்பாளர் உறவினர் வீட்டில் சோதனை…

 

பணம் பட்டுவாடா புகார்… மொடக்குறிச்சி திமுக வேட்பாளர் உறவினர் வீட்டில் சோதனை…

ஈரோடு

மொடக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனின் உறவினர் வீட்டில் நள்ளிரவில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டமன்ற தேர்தலையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லப் படுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில், மாவட்டம் முழுவதும் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர், வீடியோ குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பணம் பட்டுவாடா புகார்… மொடக்குறிச்சி திமுக வேட்பாளர் உறவினர் வீட்டில் சோதனை…

இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும், அந்த கட்சியின் துணை பொதுச் செயலாளருமான சுப்புலட்சுமி ஜெகதீசன், வாக்களர்களுக்கு வழங்குவதற்காக உறவினர் வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில், சின்னம்மாபுரம் பகுதியில் உள்ள சுப்புலட்சுமி ஜெகதீசனின் தம்பி துரைசாமி வீட்டில் நேற்று நள்ளிரவில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். அதிகாலை 2.30 மணி வரை நீடித்த இந்த சோதனையில் பணம் எதுவும் கைப்பற்றப்படாத நிலையில், பறக்கும் படை அதிகாரிகள் திரும்பி சென்றனர்.