திருவையாறு அருகே பூ வியாபாரி வெட்டிக் கொலை… தஞ்சை மாவட்ட எஸ்.பி. நேரில் விசாரணை!

 

திருவையாறு அருகே பூ வியாபாரி வெட்டிக் கொலை… தஞ்சை மாவட்ட எஸ்.பி. நேரில் விசாரணை!

தஞ்சாவூர்

திருவையாறு அருகே முன்விரோதம் காரணமாக பூ வியாபாரி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள ஈச்சங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பாலன். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக கடந்த 2019ஆம் ஆண்டு ஏற்பட்ட மோதலில் பாலன் அரிவாளால் வெட்டியதில், சந்திரனின் கைவிரல் துண்டாகி உள்ளது.

இந்த வழக்கில் கைதாகி சிறை சென்ற பாலன், விடுதலைக்கு பின் கும்பகோணம் அடுத்த சுந்தரபெருமாள் கோவில் பகுதியில் தங்கியிருந்து பூ வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று ,வெளியே சென்ற பாலன் மீண்டும் வீடு திரும்பவில்லை. இகுறித்து அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலசார் பாலனை தேடி வந்தனர்.

திருவையாறு அருகே பூ வியாபாரி வெட்டிக் கொலை… தஞ்சை மாவட்ட எஸ்.பி. நேரில் விசாரணை!

இந்த நிலையில், திருவையாறு அடுத்து உள்ள சிறுபுலியூரில் பாலன் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் கால்வாயில் சடலமாக கிடந்தார். தகவல் அறிந்த தஞ்சை எஸ்.பி., தேஷ்முக் சேகர் சஞ்சய் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து, கொலை குறித்து திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சந்திரனின் உறவினர்கள் முன்விரோதம் காரணமாக பாலனை கடத்திச் சென்று வெட்டிக்கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து, தப்பியோடிய கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.