தேனியில் கனமழை.. கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு!
Aug 23, 2020, 12:01 IST1598164299000
தமிழகத்தில் வேலூர், சேலம், தேனி, தருமபுரி, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன் படி சேலம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி, மக்களின் இயல்பு வாழக்கை பாதித்துள்ளது.
இந்த நிலையில் தேனியில் பெய்த கனமழையின் காரணமாக பெரியகுளம் அருகே இருக்கும் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் நேற்று இரவு கனமழை பெய்ததால், இந்த அருவிவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.