நிவர் புயல் எதிரொலி: விமானங்களின் நேரம் மாற்றியமைப்பு!

 

நிவர் புயல் எதிரொலி: விமானங்களின் நேரம் மாற்றியமைப்பு!

வங்கக்கடலில் நேற்று உருவான நிவர் புயல், சென்னையில் இருந்து 350 கி.மீ தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து 300 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. புயலின் காரணமாக காற்றின் வேகம் அதிகரிப்பதால், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் நிலையில், கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் எதிரொலி: விமானங்களின் நேரம் மாற்றியமைப்பு!

145 கி.மீ வேகத்தில் காற்று வீசி நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை நிவர் புயல் மாமல்லபுரம்- புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. அதனால், புதுச்சேரியிலும் தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

நிவர் புயல் எதிரொலி: விமானங்களின் நேரம் மாற்றியமைப்பு!

அதன் ஒரு பகுதியாக மக்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு பேருந்து சேவைகளும், ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் வரக்கூடிய விமானங்களின் நேரம் மாற்றிமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமான பயணம் மேற்கொள்பவர்கள் விமான நிறுவனத்தை தொடர்பு கொண்டு தகவல்களை கேட்டு பெற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.