“பிளைட்ல பைலட் மட்டும்தான் பறப்பாருங்கோ” -உள்ளூர் விமானத்துக்கே இவ்ளோ கண்டிஷனா ?

 

“பிளைட்ல பைலட் மட்டும்தான் பறப்பாருங்கோ” -உள்ளூர் விமானத்துக்கே இவ்ளோ கண்டிஷனா ?

உள்நாட்டு விமான போக்குவரத்து விரைவில் தொடங்கப்படவுள்ள நிலையில் அதற்கான வழிக்காட்டுதலை சிவில் விமான போக்கு வரத்து கழகம் வெளியிட்டுள்ளது .

“பிளைட்ல பைலட் மட்டும்தான் பறப்பாருங்கோ” -உள்ளூர் விமானத்துக்கே இவ்ளோ கண்டிஷனா ?


கொரானா பரவல் காரணமாக உள்நாடு ,வெளிநாடு விமான போக்குவரத்து முடக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது .இதற்கான வழிகாட்டுதலை சிவில் விமான போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது .இதன்படி விமான நிலயத்துக்குள் வந்து தொடுதிரையில் செக் இன் செய்வதற்கு பதிலாக அதற்கு முன்பே, பயணிகள் வீட்டிலேயே செக் இன் செய்து போர்ட் இன் பாஸ் பெறவேண்டுமென்றும் ,ஆரோக்ய சேது ஆப் மூலம் பச்சை நிற சிக்னல் பெறவேண்டுமென்றும் .பயணிகள் கட்டாயமாக முக கவசம் அணிந்து மற்றும் சமூக இடைவெளிகளை பின்பற்ற வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது
மேலும் தங்களின் விமானம் வருவதற்கு முன்பே இரண்டு மணி நேரத்திற்கு முன்பே பயணிகள் விமானநிலையத்திற்குள் இருக்க வேண்டுமென்றும் ,பயணிகளுக்கு விமான நிறுவனமே முக கவசம் மற்றும் சானிடைசேர்கள் வழங்குமென்றும் ,மேலும் வெப்பநிலை பரிசோதனையில் வைரஸ் அறிகுறிகள் காமிக்கும் நபர்கள் கண்டிப்பாக அனுமதிக்க மாட்டார்களென்றும் ,14 வயதுக்குள் இருக்கும் சிறுவர்களுக்கு விதி விலக்கு உண்டென்றம் அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது .