சென்னையிலிருந்து 3 ஊர்களுக்கு விமான சேவை நிறுத்தம்

 

சென்னையிலிருந்து 3 ஊர்களுக்கு விமான சேவை நிறுத்தம்

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 2,710பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62,087 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்திலேயே அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,752 ஆக உயர்ந்துள்ளது. அதனால் கொரோனா அதிகமாகப் பரவி வரும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து 3 ஊர்களுக்கு விமான சேவை நிறுத்தம்

இந்நிலையில் முழு ஊரடங்கு காரணமாக சென்னையில் இருந்து மதுரை செல்லும் 4 விமானங்கள் மற்றும் தூத்துக்குடி, திருச்சி செல்லும் விமானங்களும் நாளை முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன