வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்
Sep 27, 2020, 17:37 IST1601208473000
கொரொனா தொற்றுக்கு காவல்துறையினரும் தொடர்ந்து பலியாகிக்கொண்டிருக்கின்றனர். ஆம்பூர் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் சண்முகம் கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக உயிரிழந்தார்.
இதையடுத்து சண்முகத்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் மற்றும் துணை கண்காணிப்பாளர்கள் மருத்துவமனக்கு வந்தனர்.
ஆறுதல் கூறிய அவர்களுக்கு, உதவி ஆய்வாளர் சண்முகத்தின் மனைவி சல்யூட் செய்த வைத்தார். இந்த நிகழ்வு மருத்துவமனையில் இருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.