திருப்பத்தூரில் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு

 

திருப்பத்தூரில் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று துணை ராணுவம் மற்றும் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் அமைதியாக நடைபெறவும், அச்சமின்றி பொதுமக்கள் வாக்களிக்கவும் வலியுறுத்தி காவல்துறை சார்பில் இன்று கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த பேரணியில் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் தலைமையில் துணை ராணுவப்படை வீரர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை மற்றும் மாவட்ட காவல்துறையை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்பத்தூரில் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு

திருப்பத்தூர் வீட்டு வசதிவாரிய குடியிருப்பு பகுதியில் தொடங்கிய இந்த கொடி அணிவகுப்பு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று திருப்பத்தூர் தூய நெஞசக கல்லூரியில் நிறைவடைந்தது. காவல் துறையினரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.