“போதையில் தூங்குறோம், கிடைக்காம ஏங்குறோம்” -போதையில் சிக்கிய நடிகைகளால் போலீசின் பிடியில் பப்கள்

 

“போதையில் தூங்குறோம், கிடைக்காம ஏங்குறோம்” -போதையில் சிக்கிய நடிகைகளால் போலீசின் பிடியில்  பப்கள்

சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் கன்னட திரைப்பட நடிகைகள் சிலர் போதைப்பொருட்களை நடிகர் , நடிகைகளுக்கு ரெகுலராக வழங்கியதாக அங்குள்ள போதை பொருள் போலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது .இந்நிலையில் அங்கு மீண்டும் போதைப்பொருட்கள் திரையுலகை சேர்ந்தவர்களுக்கு வழங்கி அவர்களை அடிமையாக்காமலிருக்க போதை பொருள் போலீசார் அங்குள்ள பப்களை தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளார்கள்

“போதையில் தூங்குறோம், கிடைக்காம ஏங்குறோம்” -போதையில் சிக்கிய நடிகைகளால் போலீசின் பிடியில்  பப்கள்


போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிரான ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக நகரில் உள்ள ஐந்து பப்களில் கடந்த சனிகிழமையதன்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனைகளை நடத்தினார்கள் .
அப்போது அதைப்பற்றி கூறிய போலீசார், “சமீபத்தில் நடத்தப்பட்ட போதைப்பொருள் வழக்கு விசாரணையில், நாங்கள் சில பப்களில் போதை மருந்துகள் கொடுக்கப்படுவதை கண்டறிந்தோம். ஆகவே, அங்கு சோதனைகள் நடத்த வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டு, ஐந்து பப்களில் சனிக்கிழமை இரவு சோதனையிடப்பட்டன” என்று பெங்களூரு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பாட்டீல் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
ரெய்டுகளின் போது ஏதாவது போதைப்பொருட்கள் அங்கு சிக்கியுள்ளதாயென்றும் ,யாராவது நடிகர் நடிகைகள் அப்போது போதைப்பொருள் உட்கொண்டதை கண்டறிந்தார்களா என்றும் கேட்கப்பட்டதற்கு போலீசார் எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை.,

“போதையில் தூங்குறோம், கிடைக்காம ஏங்குறோம்” -போதையில் சிக்கிய நடிகைகளால் போலீசின் பிடியில்  பப்கள்