பேருந்து தீப்பிடித்ததில் குழந்தை உள்பட 5 பேர் பலி!
சித்ரதுர்கா அருகே ஹிரியூரில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் ஒரு குழந்தை உள்பட 5 பேர் பலியாகியுள்ளனர்.
கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் இன்று காலை ஒரு பயங்கர விபத்து நடந்துள்ளது. விஜயபுரத்திலிருந்து பெங்களூருக்குச் சென்ற தனியார் பேருந்து ஒன்று தீப்பிடித்ததில் 5 பேர் உயிருடன் எரிந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஹிரியூர் தாலுகாவில் உள்ள கே.ஆர்.ஹல்லி என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து திடீரென தீப்பிடித்ததால் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
Karnataka: Five people, including a baby, charred to death and 27 injured, last night in Hiriyur near Chitradurga district, after their bus caught fire on National Highway 4. The injured have been shifted to hospital. pic.twitter.com/Je1PxEbTv4
— ANI (@ANI) August 12, 2020
முதற்கட்ட தகவல்களின்படி, 32 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தில் என்ஜின் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஹிரியூர் போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.