ஒசூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்து – கர்நாடகாவை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

 

ஒசூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்து – கர்நாடகாவை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி

ஓசூர் அருகே மலைக்கிராமத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் கர்நாடகாவை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மஞ்சுகொண்டப்பள்ளி மலைக்கிராமம். இதன் அருகாமையில் தப்பகுலி பகுதியில் உள்ள கோயிலுக்கு கர்நாடக மாநிலம கனகபுரத்தில் இருந்து 20-க்கும் மேற்பட்டோர் டிராக்டரில் சென்றுள்ளனர்.

ஒசூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்து – கர்நாடகாவை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

மஞ்சகொண்டப்பள்ளி அருகே மலைப்பாதையில் சென்ற டிராக்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.