ஐந்து ஆண்கள் -சிக்கிய ஒரு பெண் -பாட்டிலால் நடந்த கொடூரம் -வெளியான வீடியோ

 

ஐந்து ஆண்கள் -சிக்கிய ஒரு பெண் -பாட்டிலால் நடந்த கொடூரம் -வெளியான வீடியோ

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு பெண்ணை கடத்தி வந்து பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தலைமறைவான ஐந்து பங்களாதேஷ்வாசிகளை போலீசார் கைது செய்தனர் .

ஐந்து ஆண்கள் -சிக்கிய ஒரு பெண் -பாட்டிலால் நடந்த கொடூரம் -வெளியான வீடியோ


சமூக ஊடகத்தில் சமீபத்தில் ஒரு பலாத்கார வீடியோ வைரலானது .அந்த வீடியோவில் ஒரு பெண்ணை ஐந்து பங்களாதேஷ் ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்து ,அவரின் தனிப்பட்ட பாகத்தில் பாட்டிலால் தாக்கும் காட்சி பதிவாகியுள்ளது .அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலர் கொதித்து தங்களின் கோபத்தை அதில் வெளியிட்டனர் .
இந்நிலையில் அந்த வீடியோவை பார்த்த போலீஸ் அதிகாரிகள் அந்த நபர்களை பற்றி விசாரித்தனர் .அப்போது அவர்கள் அனைவருமே பங்களாதேஷை சேர்ந்தவர்கள் என்று கணடறிந்தனர் .அந்த ஐந்து பேரும் அந்த பெண்ணை பங்களாதேஷிலிருந்து இந்தியாவுக்கு கடத்தி வந்துள்ளனர் .சட்டவிரோதமாக வந்த அவர்களுக்குள் பணத்தக்காராரு ஏற்பட்டுள்ளது .அப்போது அந்த ஐந்து நபர்களும் சேர்ந்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்து ,பாட்டிலால் அவரின் தனிப்பட்ட பகுதியை சேதப்படுத்தினர் .அதில் ஒருவர் இந்த காட்சியை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார் . இந்த வீடியோ இந்தியா மற்றும் பங்களாதேஷில் உள்ள டிஜிட்டல் தளங்களை உலுக்கியது .பின்னர் போலீசார் அவர்களை தேடி அசாம் போன்ற பகுதிகளுக்கு சென்றனர் .அப்போது அவர்களில் ஒருவரை பிடித்து விசாரித்தனர் .அப்போது அவர்கள் பெங்களூரில் இருப்பதாகவும் ,பாதிக்கப்பட்ட பெண் வேறு மாநிலத்தில் இருப்பதாகவும் கணடறிந்தனர் .இறுதியாக, அவர்கள் அனைவரும் பெங்களூரு ராமமூர்த்தி நகரில் கைது செய்யப்பட்டனர்.

ஐந்து ஆண்கள் -சிக்கிய ஒரு பெண் -பாட்டிலால் நடந்த கொடூரம் -வெளியான வீடியோ