கும்மிடிப்பூண்டி அருகே மின்சாரம் தாக்கி மீன் வியாபாரி பலி!

 

கும்மிடிப்பூண்டி அருகே மின்சாரம் தாக்கி மீன் வியாபாரி பலி!

திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி அருகே மீன்வளர்ப்பு குட்டையில் மீன்பிடித்தபோது மின்சாரம் தாக்கி வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள மாநெல்லூர் ஊராட்சி குந்தலிமேடு பகுதியை சேர்ந்த மோகன் ராவ் (43). மீன் வியாபாரி. இவர் நேற்று முன்தினம் கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள பொதியாரங்குளம் பகுதியில் உள்ள வளர்ப்பு மீன் குட்டையில் மின்பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

கும்மிடிப்பூண்டி அருகே மின்சாரம் தாக்கி மீன் வியாபாரி பலி!

அப்போது, மீன்பிடி குட்டையில் இருந்த மின் மோட்டாரில் இருந்து எதிர்பாராத விதமாக குட்டையில் மின்சாரம் பாய்ந்தது. இதில் மோகன்ராம் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த ஆரம்பாக்கம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.