விசைப்படகு மீனவர்கள் 12 மணி நேரம் மட்டுமே மீன் பிடிக்க வேண்டும்!

 

விசைப்படகு மீனவர்கள் 12 மணி நேரம் மட்டுமே மீன் பிடிக்க வேண்டும்!

கொரோனா வைரஸ் இந்தியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை லட்சத்தை கடந்துச் செல்கிறது. இருப்பினு, நான்காம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.இதனிடையே ஊரடங்கள் படகுகள், எந்திரம் பொருந்திய மற்றும் இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ம் தேதி மீன் பிடிக்கக் கூடாது என்றும் மேற்கு கடற்கரைப் பகுதியில் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூலை 31 -ம் தேதி மீன் பிடிக்க கூடாது என்றும் அறிவிக்கப்பட்டது.

விசைப்படகு மீனவர்கள் 12 மணி நேரம் மட்டுமே மீன் பிடிக்க வேண்டும்!

அதனால் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தடையை குறைக்குமாறு மீன்வளத்துறை அமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். அதன் படி, கிழக்கு கடற்கரை பகுதியில் மே-31 ஆம் தேதி வரையிலும் மேற்கு கடற்கரைப் பகுதியில் ஜூன் 15 முதல் 31 ஆம் தேதி வரை தடைகாலம் குறைக்கப்பட்டது. அதனால் வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன் பிடிக்க செல்லலாம் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிலையில், ஜூன் 15 ஆம் தேதி முதல் விசைபடகு மீனவர்கள் 12 மணி நேரம் மட்டுமே மீன்பிடிக்க வேண்டும் என்று கடல் உணவு ஏற்றுமதி சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக வெளிநாடுகளுக்கு கடல் உணவுகளை ஏற்றுமதி செய்ய முடியாத சூழல் நிலவுவதால் என்பதாலும் 12 மணி நேரம் மீன் பிடித்தால் இறால்களின் தரம் மேம்பாட்டுடன் இருக்கும் என்பதாலும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.