காசிமேடு மீனவர்கள் 10 பேர் மாயம் – 49 நாட்களாக நீடிக்கும் மர்மம்

 

காசிமேடு மீனவர்கள் 10 பேர் மாயம் – 49 நாட்களாக நீடிக்கும் மர்மம்

சென்னை, காசிமேட்டைச் சேர்ந்த 10 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று, 49 நாட்களாக திரும்பாததால் உறவினர்கள் சோகத்தில் உள்ளனர்.

49 நாட்களாகியும் தேடும் பணி தொடங்கவில்லை என மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக, மீனவர்களை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் என மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் மீன்துறை இயக்குனரிடம் கடந்த மாதம் மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இருப்பினும் தற்போது வரை மாயமான மீனவர்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து காணாமல் போன மீனவர்களின் உறவினர்கள் மற்றும் தமிழக மக்கள் உரிமைக் கூட்டியக்கம் ஆகியோர் பேரணியாக சென்று சென்னை மீன்பிடித் துறைமுகம் இயக்குனர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.