கவிழ்ந்த நாட்டுப்படகு: கடலில் மூழ்கி மீனவர் பலி!

 

கவிழ்ந்த நாட்டுப்படகு: கடலில் மூழ்கி மீனவர் பலி!

நெல்லை மாவட்டத்தில் படகு கவிழ்ந்ததால் கடலில் மூழ்கி மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் கடலுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கவிழ்ந்த நாட்டுப்படகு: கடலில் மூழ்கி மீனவர் பலி!

நெல்லை மாவட்டம் பெருமணலில் வசித்து வரும் மீனவர் மைக்கேல் தனது நண்பர்களுடன் நாட்டுப்படகில் கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளார். அவர்கள் சென்ற போது கடல் சீற்றத்துடன் இருந்ததாக கூறப்படும் நிலையில், கடலின் பாதி தூரத்தில் படகு கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் படகில் இருந்த மீனவர்கள் எல்லாரும் கடலில் விழுந்து, நீந்திக் கொண்டே கரை சேர்ந்துள்ளனர். ஆனால் கடல் நீர் உள்ளே சென்றதால் நீந்த முடியாத மைக்கேல், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மைக்கேலை காப்பாற்ற முயன்றும் அவரை மீட்க முடியவில்லை என கரையேறிய மீனவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.