வரும் 15 முதல் 26ம் தேதி வரை முதலாமாண்டு மாணவர்களுக்கு தேர்வு- அண்ணா பல்கலை

 

வரும் 15 முதல் 26ம் தேதி வரை முதலாமாண்டு மாணவர்களுக்கு தேர்வு- அண்ணா பல்கலை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சறுத்தலால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்ட அரசு, ஜன.19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறந்தது. இதனிடையே, இறுதியாண்டு கல்லூரி மாணவர்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே கல்லூரிகள் திறக்கப்பட்டுவிட்டன. இதனையடுத்து பிப்.8ம் தேதி முதல் இளங்கலை மற்றும் முதுகலை கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டன.

வரும் 15 முதல் 26ம் தேதி வரை முதலாமாண்டு மாணவர்களுக்கு தேர்வு- அண்ணா பல்கலை

இந்த சூழலில் முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான முதல் செமஸ்டர் தேர்வு தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு வரும் 15 முதல் 26ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்திற்கு ஒரு மணி நேரம் வீதம் ஆன்லைனில் தேர்வுகள் நடைபெறும் என பல்கலைக்கழகம் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.