தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு!

 

தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு!

தமிழகத்தில் ஜனவரி 19 முதல் 10, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு!

இந்நிலையில் தமிழகத்தில் ஜனவரி 19 முதல் 10, 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்படலாம் என்றும் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அரசு வெளியிடும் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிக்கு வரும் மாணவர்ளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்க சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு!

கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க கோரியதால் தமிழக அரசு இவ்வாறு முடிவெடுத்துள்ளது எனவும் மாணவர்களின் நலன் கருதி அரசு எடுத்துவரும் கோவிட்19 தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பெற்றோர்களும் ,ஆசிரியர்களும் மற்றும் மாணவர்களும் முழு ஒத்துழைப்பை அளிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.