தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்!

 

தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்!

கொரோனா பரவலை கட்டுபடுத்தும் நோக்கில் தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்!

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்குநாள் தீவிரமாகிக் கொண்டே வருகிறது.தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 10941 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 லட்சத்து 2 ஆயிரத்து ஆயிரத்து 392 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 157 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்!

இந்த சூழலில் தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு இன்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமுலுக்கு கொண்டு வருகிறது. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தனியார் /பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்ட எந்த வாகனங்களுக்கும் அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவசர மருத்துவ தேவை மற்றும் பால் மருந்து போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வாகனங்கள் இயங்க அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்!

விமான நிலையம், ரயில் நிலையம் செல்வதற்கு மட்டும் வாடகை ஆட்டோ, டாக்சி, தனியார் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் பெட்ரோல் பங்குகள் தொடர்ந்து செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இன்று முதல் அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிகள் பூங்காக்கள் உயிரியல் பூங்காக்கள் போன்ற இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை. அதே போல் பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இரவு நேர ஊரடங்கின் போது மக்கள் நடமாட்டம் இருக்கிறதா என்பதை சோதனை செய்ய சுமார் 200 இடங்களில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.