கொலை செய்ய சதி…கதறிய அமைச்சர் : காவல்துறையின் ரியாக்ஷன்!!

 

கொலை செய்ய சதி…கதறிய அமைச்சர் :  காவல்துறையின் ரியாக்ஷன்!!

அமைச்சர் கடம்பூர் ராஜூ கார் மீது பட்டாசு கொளுத்தி போட்ட அமமுகவினர் இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்றுமுன்தினம் கோவில்பட்டியில் பிரச்சாரம் முடித்து கொண்டு காரில் திரும்பிய போது அமமுக தொண்டர்கள் பட்டாசை திடீரென்று அமைச்சரின் கார் டயரின் அருகே கொளுத்திவிட பட்டாசு சில நிமிடங்கள் வெடித்து சிதறியது. இதனால் அமைச்சர் அங்கு புகைமூட்டத்தில் சிக்கி கொண்டார். இதை தொடர்ந்து போலீசார் அங்கு வந்து அமைச்சரை பத்திரமாக அனுப்பி வைத்ததுடன், அங்கிருந்த கூட்டத்தை கலைத்தனர்.

கொலை செய்ய சதி…கதறிய அமைச்சர் :  காவல்துறையின் ரியாக்ஷன்!!

இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ , கோவில்பட்டியில் எனது காரை வழி மறித்த அமமுகவினர் அங்கு வைத்திருந்த பட்டாசுகளை எடுத்து என் கார் மீது வீசினர். வாகனம் தீப்பற்றி எரியக்கூடிய சூழல் ஏற்பட்டது. என்மீதும் , கார் டிரைவர் மீதும் தீப்பொறிப்பட்டு காயம் ஏற்பட்டது. எனது கார் டிரைவர் லாவகமாக காரை ஓட்டவில்லை என்றால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கும். நான் வெற்றி பெறுவேன் என்று தெரிந்துவிட்டது. அதனால் என்னைக் கொல்ல முயற்சி செய்கிறார்கள்” என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

கொலை செய்ய சதி…கதறிய அமைச்சர் :  காவல்துறையின் ரியாக்ஷன்!!

இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கார் அருகே, பட்டாசு வெடித்து அச்சுறுத்திய அமமுக நிர்வாகிகள் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. என்னை கொலை செய்ய முயற்சி நடக்கிறது என அமைச்சர் கடம்பூர் ராஜூ வெளிப்படையாக அறிவித்த நிலையில் அமமுக நிர்வாகிகள் கார்த்திக் மற்றும் கருப்பசாமி மீது மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.