மீண்டும் பட்டாசு வெடி விபத்து.. விருதுநகரில் தொடரும் கோரம்!

 

மீண்டும் பட்டாசு வெடி விபத்து.. விருதுநகரில் தொடரும் கோரம்!

விருதுநகர் மாவட்டத்தில் சுற்று வட்டாரப் பகுதிகளில் நிறைய பட்டாசு தயாரிக்கும் கம்பெனிகள் இருக்கின்றன. அந்த பட்டாசு ஆலைகளில், முறையான விதிமுறைகள் பின்பற்றப்படாததால் அங்கு தொடர் வெடி விபத்து நிகழ்ந்த வண்ணம் உள்ளது. அண்மையில் அச்சங்குளம் பகுதியில் ஏற்பட்ட கோர வெடி விபத்தில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.

மீண்டும் பட்டாசு வெடி விபத்து.. விருதுநகரில் தொடரும் கோரம்!

இதைத் தொடர்ந்து, காளையார்குறிச்சி பகுதியில் இயங்கி வந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு முன்னதாகவும் அங்கு பல வெடி விபத்துகள் நடந்துள்ளன. இதுவரை நூற்றுக் கணக்கான மக்கள் வெடி விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

மீண்டும் பட்டாசு வெடி விபத்து.. விருதுநகரில் தொடரும் கோரம்!

இந்த நிலையில், சிவகாசி அருகே குருமூர்த்தி நாயக்கன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று திடீர் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 4 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கம்பி மத்தாப்பு தயாரிக்கும் போது வெடி விபத்து நேர்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.