தீயணைப்புத்துறை வீரர்கள் தயார் நிலையில் இருக்க உத்தரவு

 

தீயணைப்புத்துறை வீரர்கள் தயார் நிலையில் இருக்க உத்தரவு

திருச்சி

நிவர் புயலை முன்னிட்டு, திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் தீயணைப்புத்துறை வீரர்கள் தயார் நிலையில் இருக்குமாறு, மாவட்ட தீயணைப்புத்துறை உதவி அலுவலர் கருணாகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நிவர் புயல் கரையை கடப்பதையொட்டி, 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் உள்ள 95 காவல் நிலையங்களில் பணியாற்றும் ஆயிரத்து 400 வீரர்களும் கட்டாயம் பணியில் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தீயணைப்புத்துறை வீரர்கள் தயார் நிலையில் இருக்க உத்தரவு

மேலும், பாதுகாப்பு மற்றும் மீட்புக்கான அனைத்து வகையான உபகரணங்கள் மற்றும் வாகனங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தியுள்ள கருணாகரன், காவலர்கள் தேவையின்றி விடுப்பு எடுக்க வேண்டாம் எனவும் கேட்டுகொண்டுள்ளார். மேலும், மருத்துவ விடுப்பு தேவைப்படுபவர்கள் மட்டும் விடுப்பு எடுக்கலாம் எனவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.