தன்னுயிரை பொருப்படுத்தவில்லை… மின்னல் வேகத்தில் பாய்ந்த தீயணைப்பு வீரர்… தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றினார்

 

தன்னுயிரை பொருப்படுத்தவில்லை… மின்னல் வேகத்தில் பாய்ந்த தீயணைப்பு வீரர்… தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றினார்

பாளையங்கோட்டையில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற நபரை தீயணைப்பு வீரர் மின்னல் வேகத்தில் சென்று காப்பாற்றினார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் கணேசபுரத்தை சேர்ந்தவர் கணேசன் (45). இவரது நிலத்தை ஒருவர் அபகரித்து வைத்துள்ளார். நிலத்தை மீட்க சட்ட போராட்டங்கள் நடத்தியதோடு, உண்ணாவிரதமும் இருந்தார். எதிலும் அவருக்கு நியாயம் கிடைக்கவில்லை. இதையடுத்து, தற்கொலை முடிவுக்கு வந்துள்ளார் கணேசன்.

சுதந்திர தினமாக இன்று உயிரை மாய்க்க முடிவு செய்துள்ளார். பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சேவியர் காலனி எண் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது கணேசன் ஏறினார். தகவல் அறிந்து பாளையங்கோட்டை தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதில் தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ், துரிதமாக செயல்பட்டு கணேசனை மடக்கி பிடித்தார். தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தற்கொலை செய்யும் நோக்கில் கீழே குதிக்க முயன்ற கணசேனை உயிருடன் மீட்ட வீரர் வீரராஜிக்கும் பாராட்டு குவிந்து வருகிறது.