20 பேர் உயிர்களை பறித்த பட்டாசு ஆலை வெடி விபத்து – உரிமையாளர் கைது!

 

20 பேர் உயிர்களை பறித்த பட்டாசு ஆலை வெடி விபத்து – உரிமையாளர் கைது!

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக தலைமறைவாக இருந்த உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

20 பேர் உயிர்களை பறித்த பட்டாசு ஆலை வெடி விபத்து – உரிமையாளர் கைது!

கடந்த 12 ஆம் தேதி விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சன்குளத்தில் தனியார் பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 20 பேர் உடல் கருகி பலியாகினர். அத்துடன் 29 பேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து தொடர்பாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக குத்தகைதாரர் சக்திவேல் ,உள்குத்தகைதாரர் பொன்னுப்பாண்டி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.

20 பேர் உயிர்களை பறித்த பட்டாசு ஆலை வெடி விபத்து – உரிமையாளர் கைது!

இந்நிலையில் 20 பேர் உயிர்களைப் பறித்த சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே குத்தகைதாரர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஆலை உரிமையாளர் சந்தனமாரி கைது செய்யப்பட்ட நிலையில் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.