விருதுநகரில் தொடர்கதையாகும் ‘பட்டாசு ஆலை வெடி விபத்து’!

 

விருதுநகரில் தொடர்கதையாகும் ‘பட்டாசு ஆலை வெடி விபத்து’!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் பட்டாசு உற்பத்தியையே தொழிலாக கொண்டுள்ளன. அம்மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் பல பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. அந்த ஆலைகள் முறையாக விதிமுறைகளை பின்பற்றாததால், வெடி விபத்து சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இதுவரை 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு வெடி விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

விருதுநகரில் தொடர்கதையாகும் ‘பட்டாசு ஆலை வெடி விபத்து’!

இன்று காலை சாத்தூர் அருகே தாயில்பட்டி கலைஞர் காலனியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த போது வெடி விபத்து நேர்ந்தது. இதில் 5 வீடுகள் இடிந்து தரைமட்டமான நிலையில் 5 வயது சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சிவகாசி அருகே புலிப்பாறைப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து நேர்ந்துள்ளது.

தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் ஏதேனும் உயிர் சேதம் ஏற்பட்டதா? என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.