நள்ளிரவில் சிலிண்டர் வெடித்து விபத்து; 200க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசம்!

 

நள்ளிரவில் சிலிண்டர் வெடித்து விபத்து; 200க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசம்!

திருச்சி அருகே சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் 200க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாகின.

திருச்சி மாநகர் சங்கிலியாண்டபுரம் அருகே இருக்கும் பகுதிகள் எம்ஜிஆர் நகர் மற்று ராமமூர்த்தி நகர். இப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடிசைகள் இருக்கின்றன. இங்கு வசிப்பவர்கள் எல்லாரும் கூலித் தொழிலாளிகள். இந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணி அளவில் குடிசைகளில் திடீரென தீப்பற்றத் தொடங்கியுள்ளது. இதனை உணர்ந்த மக்கள், உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

நள்ளிரவில் சிலிண்டர் வெடித்து விபத்து; 200க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசம்!

உடனே 8க்கும் மேற்பட்ட வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தீ விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், ஒரு வீட்டில் சிலிண்டர் வெடித்ததால் தீ மளமளவென பரவி எல்லா குடிசைகளும் தீப்பற்றி எரிந்தது தெரிய வந்தது.

நள்ளிரவில் சிலிண்டர் வெடித்து விபத்து; 200க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசம்!

இச்சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. தீ விபத்தால் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானதால், அரசு தங்களுக்கு உதவி புரிய வேண்டும் என குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.