‘திடீரென பற்றிய தீ’.. நாகை அருகே 7 வீடுகள் எரிந்து சேதம்!

 

‘திடீரென பற்றிய தீ’.. நாகை அருகே 7 வீடுகள் எரிந்து சேதம்!

நாகப்பட்டினம் வெளிப்பாளையம் அண்ணா நகரில் வசித்து வருபவர் தினேஷ்குமார்.இவர் இன்று காலை வழக்கம் போல வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்ற நிலையில், திடீரென அவர் வீடு தீப்பற்றி எரிந்துள்ளது. தினேஷ்குமார் வீட்டில் ஏற்பட்ட தீ மளமளவென அக்கம் பக்கத்தில் இருந்த ஏழு வீடுகளுக்குள் பரவியுள்ளது. தீயணைப்பு துறையினர் வருவதற்குள், ஏழு வீடுகளும் தீப்பிடித்து எரிந்ததால் முற்றிலும் சேதம் ஆகியுள்ளது.

‘திடீரென பற்றிய தீ’.. நாகை அருகே 7 வீடுகள் எரிந்து சேதம்!

பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில்7 வீடுகள் எரிந்து நாசமான நிலையில் தினேஷ்குமார் திருமணத்திற்காக வைத்திருந்த ரூ.1,80,000 பணம் எரிந்து சாம்பல் ஆகியுள்ளது.

அதே போல, அக்கம் பக்கத்தினர் வீட்டிலும் பீரோ, கட்டில், பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களும் பணமும் எரிந்து நாசமாகியுள்ளது. தினேஷ்குமார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதை அறிந்து மக்கள் உடனே வீட்டை விட்டு வெளியேறியதால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.