மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் பயங்கர தீ விபத்து!

 

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் பயங்கர தீ விபத்து!

கொரோனா அச்சம் காரணமாக பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மதுரையில் மூடப்பட்டு கிடந்த ஜவுளி கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் பயங்கர தீ விபத்து!

மதுரையில் நேற்று மாலை முதல் இடியுடன் கூடிய பலத்த கனமழை பெய்து வருகிறது. அப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் உள்ள 3 மாடி கொண்ட ஜவுளி கடையில் தீ பிடித்தது. மின்னல். இடி தாக்கத்தின் போது மின் கம்பிகள் உரசியதால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் பயங்கர தீ விபத்து!

முதலில் முதல்தளத்தில் பற்றிய தீ படிப்படியாக மூன்று தளங்களிலும் எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த 50 தீயணைப்பு வீரர்கள் 3 தீயணைப்பு வாகனங்களில் பல பணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.