மதுரை ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு பணி தீவிரம்!

 

மதுரை ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு பணி தீவிரம்!

மதுரையில் மிகவும் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் இருகே ஒரு ஜவுளிக்கடை அமைந்துள்ளது. அந்த கடைக்கு இன்று வழக்கம் போல ஊழியர்கள் பணிக்கு திரும்பிய நிலையில், திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனே அங்கிருந்தவர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்ததன் பேரில், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வீரர்கள் வருவதற்குள்ளாகவே, கடை முழுவதும் தீ பரவிவிட்டதாக தெரிகிறது.

மதுரை ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு பணி தீவிரம்!

இருப்பினும், தீயை கட்டுக்குள் கொண்டு வர வீரர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். தகவல் அறிந்து வந்த போலீசார், தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு ஏற்பட்டதால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வாரம் மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் இதே போன்று தீ விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் சிக்கி 2 தீயணைப்பு வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் குறிப்பிடத்தக்கது.