கடலூர் என்.எல்.சி அனல்மின் நிலையத்தில் திடீரென பாய்லர் வெடித்து தீ விபத்து!

 

கடலூர் என்.எல்.சி அனல்மின் நிலையத்தில் திடீரென பாய்லர் வெடித்து தீ விபத்து!

கடலூர் மாவட்டத்தில் 2 ஆவது அனல்மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று காலை வழக்கம் போல ஊழியர்கள் பணிக்குத் திரும்பிய நிலையில், திடீரென பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், அனல்மின் நிலையத்தினுள் சிக்கியுள்ள ஊழியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எப்படி பாய்லர் வெடித்தது? என்பது குறித்த எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை. மேலும், தற்போது 16 ஊழியர்கள் தீ விபத்தில் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.