திருவள்ளூர் அருகே ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து!

 

திருவள்ளூர் அருகே ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து!

செங்குன்றம் அருகே ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீயை 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த கிராண்ட் லைன் உதயசூரியா நகரில் உள்ள ரசாயன ஆலை ஒன்றில் திடீரென தீ பிடித்துள்ளது. இதுகுறித்து செங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் மாதவரம், மணலி, அம்பத்தூர், கோயம்பேடு ஆகிய 5 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ரசாயனம் என்பதால் தீ கொழுந்துவிட்டு எரிந்து வருவதால் தீயை அணைப்பது பெரும் சவலாக இருந்தது.

திருவள்ளூர் அருகே ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து!

தண்ணீர் மற்றும் நுரையை கொண்டு தீயை கட்டுப்படுத்தினர். குடியிருப்புகளுக்கு மத்தியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால், குடியிருப்புகளுகளில் இருக்கும் ஏசி உள்ளிட்டவை பழுதாகின. கரும்புகை சூழ்ந்து வருவதால் குடியிருப்புவாசிகளை தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்து குறித்து செங்குன்றம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.