சென்னை பாரிமுனையில் உள்ள நகைக்கடை கட்டிடத்தில் திடீர் தீ விபத்து!

 

சென்னை பாரிமுனையில் உள்ள நகைக்கடை கட்டிடத்தில் திடீர் தீ விபத்து!

சென்னையின் மிக முக்கிய வர்த்தக மையமான பாரிமுனையில் உள்ள பாத்திமா ஜுவல்லர்ஸ் நகைக்கடை அடுக்குமாடி கட்டிடத்தில் இன்று பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென பரவி கட்டிடத்தின் இரண்டு அடுக்குகளிலும் கொழுந்துவிட்டு எரிந்துள்ளது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை பாரிமுனையில் உள்ள நகைக்கடை கட்டிடத்தில் திடீர் தீ விபத்து!
i

கடையில் இருந்த அனைவரும் தீ விபத்து ஏற்பட்டவுடன் வெளியேறியதால் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டது. எனினும், கடைக்கு கீழே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தீ விபத்தில் சிக்கி எரிந்து சேதமடைந்துள்ளன. நடைபாதையில் உள்ள கடைகள் சிலவற்றிலும் தீ பற்றியுள்ளது. இந்த விபத்தில் கடைக்குள் இருந்த நகைகள் பெரும்பாலானவை தீயில் கருகியதால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து சில மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.