புதுக்கோட்டை அருகே தீ விபத்தில் தம்பதி உயிரிழப்பு!

 

புதுக்கோட்டை அருகே தீ விபத்தில் தம்பதி உயிரிழப்பு!

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே வீட்டில் சிம்னி விளக்கு கவிழ்ந்து தீப்பற்றியதில் தம்பதியினர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் அடுத்த கெண்டையன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சம்சுதீன். இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ரெஜினா பேகம். இவர்களுக்கு 2 பெண்கள் உள்பட 3 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு சம்சுதீன், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.

புதுக்கோட்டை அருகே தீ விபத்தில் தம்பதி உயிரிழப்பு!

அப்போது, வெளிச்சத்திற்காக படுக்கையின் அருகே வைத்திருந்த சிம்னி விளக்கு சரிந்து விழுந்து, ரெஜினா பேகத்தின் மீது தீப்பற்றியது. இதனால் அவர் அலறி துடிக்கவே, சம்சுதீன் தீயை அணைக்க போராடினார். அப்போது, எதிர்பாராத விதமாக சம்சுதீன் மீதும் தீ பரவியது.

இதில் பலத்த தீக்காயம் அடைந்த தம்பதியினரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ரெஜினா பேகம் நேற்று உயிரிழந்தார். இந்த நிலையில், இன்று காலை சம்சுதீனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து மழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.