திருச்சியில் அடுத்தடுத்து 2 கடைகளில் தீ விபத்து!

 

திருச்சியில் அடுத்தடுத்து 2 கடைகளில் தீ விபத்து!

திருச்சி

திருச்சி ஒத்தக்கடையில் கார் உதிரிபாக கடையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

திருச்சி ஒத்தக்கடை பகுதியில் கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் இருந்து இன்று காலை திடீரென தீப்பற்றி கரும்புகை வெளியானது. இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் திருச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

திருச்சியில் அடுத்தடுத்து 2 கடைகளில் தீ விபத்து!

அதற்குள்ளாக தீ அருகில் இருந்த பேக்கரி உள்ளிட்ட 3 கடைகளுக்கு பரவி கொழுந்து விட்டு எரிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணிநேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த தீ விபத்தில் உதிரி பாக கடையில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் பேக்கரியில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து புகாரின் பேரில் திருச்சி கண்டோண்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.