கோவை- பைனான்சியரை கடத்தி பணம்கேட்டு மிரட்டிய திமுக நிர்வாகி உட்பட 4 பேர் கைது

 

கோவை- பைனான்சியரை கடத்தி பணம்கேட்டு மிரட்டிய திமுக நிர்வாகி உட்பட 4 பேர் கைது

கோவை

பொள்ளாச்சியில் பைனான்சியரை கடத்திச்சென்று ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய முன்னாள் நகராட்சி திமுக கவுன்சிலர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைதுசெய்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார்(40). இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு பைனான்ஸ் செய்து தரும் தொழில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி பொள்ளாச்சியில் இருந்து இருசக்கர

கோவை- பைனான்சியரை கடத்தி பணம்கேட்டு மிரட்டிய திமுக நிர்வாகி உட்பட 4 பேர் கைது

வாகனத்தில் திரும்பிய சாந்தகுமாரை கோட்டூர் ரோடு பாலம் அருகே மறித்த மர்மநபர்கள் அவரை காரில் கடத்திச்சென்று, தாமரைக்குளத்தில் உள்ள தோட்டத்தில் வைத்து ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். சாந்தகுமார் பணம் தர மறுத்ததால் அவரை தாக்கிய கடத்தல்காரர்கள், அவரை சென்றான்பாளையம் பகுதியில் தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். அங்கிருந்து தப்பி பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சாந்தகுமார், நேற்று பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், பொள்ளாச்சியை சேர்ந்த நகராட்சி முன்னாள் திமுக கவுன்சிலர் கண்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

கோவை- பைனான்சியரை கடத்தி பணம்கேட்டு மிரட்டிய திமுக நிர்வாகி உட்பட 4 பேர் கைது

அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், இன்று மோதிரம்புரம் பகுதியில் பதுங்கியிருந்த கண்ணன்(51), நவீன் குமார்(27), ஸ்டாலின்(30), காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த ஜான்சன்(26) ஆகியோரை கைதுசெய்தனர். பின்னர் அவர்கள் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கடத்தலுக்கு உடந்தையாக இருந்த ஆனைமலையை சேர்ந்த பாலாஜி மற்றும் சதீஷ் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.