ஈரோட்டில் மாடியில் இருந்து தவறி விழுந்து நிதிநிறுவன அதிபர் பலி… செல்போன் பேசியபோது விபரீதம்!

 

ஈரோட்டில் மாடியில் இருந்து தவறி விழுந்து நிதிநிறுவன அதிபர் பலி… செல்போன் பேசியபோது விபரீதம்!


ஈரோடு

ஈரோட்டில் மாடியில் நின்று செல்போன் பேசி கொண்டிருந்தபோது தவறி விழுந்த கரூரை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம் நியூ தமிழ்நகரை சேர்ந்தவர் ராமலிங்கம் (52). இவர் கரூரில் சொந்தமாக நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும், ஈரோடு நாராயண வலசு, திரு.வி.க. நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு ரூம் எடுத்து வாரத்தில் 2 நாட்கள் தங்கியிருந்து பணம் வசூலில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு ராமலிங்கம் ஈரோட்டில் உள்ள தான் தங்கியிருக்கும் ரூமின் இரண்டாவது மாடி வாசற்படியில் நின்றுகொண்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

ஈரோட்டில் மாடியில் இருந்து தவறி விழுந்து நிதிநிறுவன அதிபர் பலி… செல்போன் பேசியபோது விபரீதம்!

அப்போது, மழை பெய்து கொண்டிருந்த நிலையில் திடீரென வழுக்கி ராமலிங்கம் மாடியிலிருந்து கீழே தவறி விழுந்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவர் உயிருக்கு போராடினார். அவரது அலறல் சத்தம்கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று ராமலிங்கத்தை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே ராமலிங்கம் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து நிதி நிறுவன அதிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.