‘அவங்களுக்கு ஏன் வக்காளத்து வாங்குறீங்க’ ஆரி, சம்யுக்தா இடையே மோதல்!

 

‘அவங்களுக்கு ஏன் வக்காளத்து வாங்குறீங்க’ ஆரி, சம்யுக்தா இடையே மோதல்!

மாடல் சம்யுக்தாவுடன் ஆரி சண்டை போடுவது போல இன்றைய நிகழ்ச்சிக்கான 3ஆவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் சண்டை, காதல், கோபம், பாசம் என பல வகையான உணர்வுகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்க, நேற்று வைல்ட் கார்டு எண்ட்ரியாக பாடகி சுசித்ராவை வீட்டுக்குள் அனுப்பினார் பிக்கி. வழக்கம் போல உள்ளே சென்றதும், பிற ஹவுஸ்மேட்ஸ் எப்படி இருக்கிறார்கள் என்பதை பிரதிபலிக்கும் விதமாக எமோஜி கொடுத்து உசுப்பேத்தி விட்டார் சுசித்ரா.

‘அவங்களுக்கு ஏன் வக்காளத்து வாங்குறீங்க’ ஆரி, சம்யுக்தா இடையே மோதல்!

அந்த எமோஜிகள் அனைத்தும் இன்றைய நிகழ்ச்சியில் எதிரொலித்திருக்கிறது. காலை எல்லாரும் சேர்ந்து அர்ச்சனா மற்றும் ஆரியை நாமினேட் செய்வது போல புரோமோ வெளியாகியதை தொடர்ந்து, சனத்துடன் பாலா சண்டை போடுவது போல 2வது புரோமோ வெளியாகி இருந்தது. இந்த நிலையில் வீட்டை சுத்தம் செய்ய சொல்லும் சம்யுக்தாவுடன் ஆரி சண்டை போடுவது போல 3ஆவது புரோமோ வெளியாகியுள்ளது.

‘அவங்களுக்கு ஏன் வக்காளத்து வாங்குறீங்க’ ஆரி, சம்யுக்தா இடையே மோதல்!

அதில், காலையிலேயே வீட்டை சுத்தம் பண்ணிடுங்க என ஆரியிடம் சம்யுக்தா சொல்ல, நேற்றைக்கு சுத்தம் செய்யாதவர்களை செய்யச் சொல்லுங்கள். ஒருதலை பட்சமா இருக்காதீங்க என ஆரி கோபமாக கூறுகிறார். அதற்கு நான் ஒருதலை பட்சமா இருக்கேனா என சம்யுக்தா கேட்க, நேற்று கேபி சொன்னாங்க இரவு சுத்தம் பண்ணிக்கலாம்னு, இப்போ நீங்க ஏன் என்ன பண்ண சொல்றீங்க என ஆரி கேட்கிறார்.

‘அவங்களுக்கு ஏன் வக்காளத்து வாங்குறீங்க’ ஆரி, சம்யுக்தா இடையே மோதல்!

இதை தொடர்ந்து, அர்ச்சனா தான் சொன்னாங்க என சம்யுக்தா கூறியதை கேட்டு கடுப்பான ஆரி, அவங்களுக்கு வக்காளத்து வாங்கி என்கிட்ட ஏன் பேசுறீங்க.. நீங்க தான் என்னை கார்னர் பண்றீங்க என ஆரி ஆத்திரத்துடன் கூறுகிறார். நீங்க ஏதாவது ஒரு விஷயத்தை பண்ணனும்னு பண்ணிட்டு இருக்கீங்க என சம்யுக்தா கூறுவது போல புரோமோ முடிகிறது. பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4ன் இன்றைய நிகழ்ச்சியில் சண்டைக்கு பஞ்சமில்லை என்பது தெளிவாக தெரிகிறது.