பட்டாசு வெடிப்பதில் தகராறு- ஒருவர் பலி
Nov 14, 2020, 19:14 IST1605361446000
தமிழகத்தில் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் புத்தாண்டை அணிந்து பட்டாசு வெடித்து குடும்பத்தினருடன் உற்சாகத்துடன் மகிழ்ந்து வருகின்றனர். இருப்பினும் கொரோனா காரணமாக சில இடங்களில் தீபாவளி பண்டிகை களையிழந்துள்ளது.
பெரியகுளம் அருகே எண்டபுளி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் தீபாவளி முன்னிட்டு பட்டாசு வெடித்த போது இரு பிரிவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாய் தகராறு முற்றிப்போய் கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த வரை மற்றொருவர் கீழே தள்ளி விட்டதில் முருகன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் அப்பகுதியில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் உள்ளதால் அங்கு பெரியகுளம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.