“ஜாலியா இருக்கலாம் ,தாலி வேணாம்” -கல்யாணத்தை விரும்பாத மணமகன் என்ன செஞ்சார் பாருங்க.

 

“ஜாலியா இருக்கலாம் ,தாலி வேணாம்” -கல்யாணத்தை விரும்பாத மணமகன் என்ன செஞ்சார் பாருங்க.


கல்யாணத்தை விரும்பாத ஒரு காதலன் அவரின் காதலியை திருமணத்திற்கு ஐந்து நாட்கள் முன்பு கொலை செய்தார் .

“ஜாலியா இருக்கலாம் ,தாலி வேணாம்” -கல்யாணத்தை விரும்பாத மணமகன் என்ன செஞ்சார் பாருங்க.


உத்தரபிரதேசத்தின் மொராதாபாத்தில் டினா என்ற பெண்ணும் ஜிதின் என்ற வாலிபரும் காதலித்து வந்தனர் .இந்நிலையில் அந்த பெண் டினா அவரிடம் சீக்கிரம் நாம் கல்யாணம் செய்து கொள்ளவேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார் .ஆனால் அந்த ஜிதினுக்கு கல்யாணத்தில் விருப்பமில்லை ,.இதனால் அந்த காதலியின் விருப்பத்திற்கு சம்மதிப்பதுபோல நடித்து ,கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்ய சொன்னார் .
அதனால் அந்த பெண் அவரின் பெற்றோரிடம் இது பற்றி கூறியதும் அவர்களும் திருமண ஏற்பட்டுகளை செய்தனர் .பின்னர் கல்யாண் பத்திரிகை முதல் கல்யாண மண்டபம் வரை ஏற்பாடு செய்யப்பட்டது .இந்நிலையில் கல்யாணத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு அந்த ஜிதின் அவரின் வருங்கால மனைவி டினாவை சேலை எடுக்க வரச்சொன்னார் .
அவரின் பேச்சை நம்பிய அந்த பெண் அவர் சொன்ன இடத்திற்கு கடந்த வாரம் வந்தார் .அதன் பிறகு அவர் தன்னுடைய பைக்கில் அந்த டிணாவை ஒரு தனிமையான் இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார் .அங்கு வைத்து அந்த பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்தார் .அதன் பிறகு அவர் மட்டும் வீட்டிற்கு வந்தார் .பிறகு அங்கு வந்த அவரிடம் டினா எங்கே என்று அனைவரும் கேட்டனர் .அப்போது அவர் எதுவும் சொல்லவில்லை .பின்னர் அந்த ஊர் மக்கள் டினா ஓரிடத்தில் பிணமாக கிடப்பபதை பார்த்து அந்த ஊர் போலீசில் புகார் கொடுத்தனர் .போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து அந்தப்பெண்ணை கொன்ற ஜிடினை கைது செய்தனர்.