கள்ளக்காதல்… வீட்டில் உல்லாசம்… பஞ்சாயத்து தலைவர்- பெண் விஏஓவை கையும் களவுமாக பிடித்த கிராம மக்கள்

 

கள்ளக்காதல்… வீட்டில் உல்லாசம்… பஞ்சாயத்து தலைவர்- பெண் விஏஓவை கையும் களவுமாக பிடித்த கிராம மக்கள்

பஞ்சாயத்து தலைவரும், பெண் கிராம நிர்வாக அலுவலரும் தனிமையில் இருந்த வீட்டை கிராம மக்கள் பூட்டினர். காவல்துறையினர் இருவரையும் காவல்துறையினர் மீட்டனர்.

சிவகங்கை மாவட்டம், சொக்கநாதன்புத்தூர் கிராம நிர்வாக அதிகாரியாக வித்யா என்பவர் பணியாற்றி வருகிறார். இதே கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார் கண்ணன். இவருக்கும், வித்யாவுக்கும் இடையே உள்ள பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி பஞ்சாயத்து அலுவலகத்தில் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்த விவகாரம் கிராம மக்களுக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து, இருவரையும் கையும் களவுமாக பிடிக்க கிராம மக்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம், கண்ணனின் இல்லத்திற்கு வித்யா வந்துள்ளார். அப்போது, இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.

இந்த தகவல் ஊர் மக்களுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, வித்யாவின் கணவர் மற்றும் குடும்பத்தினருடன் பஞ்சாயத்துக்கு தலைவர் வீட்டிற்கு வந்தனர். அப்போது, வீட்டினை பூட்டி இருவரையும் சிறைபிடித்தனர். இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இருவரையும் அங்கிருந்து மீட்டு சென்றனர். இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுனர். இதையடுத்து, துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறையினர் உறுதியளித்தனர்.