“கடன் கேட்டு வந்தவளை கண்டம் பண்ணிட்டியே” -பேங்க் மானேஜரிடம் சிக்கிய மாணவி

 

“கடன் கேட்டு வந்தவளை கண்டம் பண்ணிட்டியே” -பேங்க் மானேஜரிடம் சிக்கிய மாணவி

ஒரு வங்கி மேனேஜர் கல்வி கடன் தருவதாக கூறி ஒரு 16 வயதான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார் .

“கடன் கேட்டு வந்தவளை கண்டம் பண்ணிட்டியே” -பேங்க் மானேஜரிடம் சிக்கிய மாணவி

மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூரில் வசிக்கும் பர்விந்தர் சிங் என்பவர் ,இந்தூரில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார் .அப்போது அவரின் வீட்டில் ஒரு பெண் வேலை செய்தார் .அந்த பெண்ணின் மகன் மூலம் ஒரு 16 வயதான பெண் அந்த வங்கி மேனேஜருக்கு அறிமுகமானார் .அப்போது அந்த வங்கி மேமேஜர் அந்த பெண்னின் அழகில் மயங்கினார் .அதன் பிறகு அந்த மேனேஜர் அந்த பெண்ணிடம் அவருக்கு வங்கியில் கடன் வாங்கி கொடுத்து,உயர் படிப்பு அவரை படிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறினார் .

அதனால் அவரின் ஆசை வார்த்தையில்  அவர் மயங்கினார் .அதன் பிறகு அந்த வங்கி மேனேஜர் சிங் அந்த பெண்ணை கோவாவிற்கு அழைத்து சென்றார் .அதன் பிறகு கோவாவில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து அவரை மூன்று நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்தார் .மேலும் அந்த காட்சியை வீடியோ படமெடுத்து அவரை பலமுறை பிளாக் மெயில் செய்தார் .அதனால் அந்த டீனேஜ் பெண் மிகவும் மன உலைச்சலுக்கு ஆளானார் .அதனால் அந்த பெண் அவரின் ஆசிரியருக்கு கடந்த வாரம் தான் தற்கொலை செய்து கொள்ள இருப்பதாக மெஸேஜ் அனுப்பினார் .அதை பார்த்த அந்த ஆசிரியர் அந்த பெண்ணின் பெற்றோரிடம் இந்த விஷயத்தை கூறி அந்த பெண்ணின் தற்கொலையிலிருந்து காப்பாற்றினார் .பின்னர் அனைவரும் சேர்ந்து அங்குள்ள  காவல் நிலையத்தில் அந்த வங்கி மேனேஜர் மீது புகாரளித்தார்கள் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வங்கி மேனேஜரையும் ,அவரிடம் அந்த பெண்ணை அறிமுகம் செய்த வாலிபரையும் கைது செய்தார்கள் .

“கடன் கேட்டு வந்தவளை கண்டம் பண்ணிட்டியே” -பேங்க் மானேஜரிடம் சிக்கிய மாணவி