நாம் தமிழர் கட்சி நிர்வாகியுடன் தகராறு: பெண் ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்!

 

நாம் தமிழர் கட்சி நிர்வாகியுடன் தகராறு: பெண் ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்!

வாணியம்பாடி அருகே உள்ள நிம்மியப்பட்டு பெண் ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள நிம்மியப்பட்டு ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்தவர் ஜீவஜோதி. இக்கிராமத்தில் அரசு அமைத்த ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகே, தனியார் நிறுவனம் ஆழ்துளை கிணறு அமைத்துள்ளது. இதனை பொதுமக்கள் தட்டி கேட்க, தனியார் நிறுவன அதிகாரிகள் ஊராட்சி செயலாளருக்கு ரூ.10,000 கொடுத்து அனுமதி பெற்று விட்டதாக தெரிவித்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சி நிர்வாகியுடன் தகராறு: பெண் ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்!

இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நபர், ஜீவ ஜோதியின் அலுவலகத்திற்கு சென்று கையூட்டு பெற்றது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது பதில் அளிக்க மறுத்த ஜீவஜோதி, அந்த நபரையும் தாக்கியதாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வைரமுத்து என்பவருக்கும் ஜீவ ஜோதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், நிம்மியம்பட்டு ஊராட்சி செயலாளர் ஜீவஜோதி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆழ்துளை கிணறு தொடர்பான இந்த விவகாரம் அம்மாவட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு எட்டியதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.