“பணம் ,பங்களா இருந்தாலும் நிம்மதி இல்லையே” -ஒரு ஐ. டி. பெண் அதிகாரி எடுத்த அதிர்ச்சி முடிவு

 

“பணம் ,பங்களா இருந்தாலும் நிம்மதி இல்லையே” -ஒரு ஐ. டி. பெண் அதிகாரி எடுத்த அதிர்ச்சி முடிவு

ஒரு ஐ.டி. நிறுவனத்தில் அதிகாரியாக வேலை செய்த பெண் குடும்ப தகராறால் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்


தமிழகத்தின் சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் தன்னுடைய 45 வயதான மனைவி அனிதாவுடன் வசித்து வருகிறார் . இவர், தாம்பரத்தில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் அதிகாரியாக வேலை செய்து வந்தார்.இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது

“பணம் ,பங்களா இருந்தாலும் நிம்மதி இல்லையே” -ஒரு ஐ. டி. பெண் அதிகாரி எடுத்த அதிர்ச்சி முடிவு

இந்த குடும்பம் அந்த வீட்டின் முதல் மாடியில் வசித்து வருகின்றனர். தரைதளத்தில் உள்ள வீட்டில் வினோத்குமாரின் பெற்றோர் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் அந்த பெண் அதிகாரி கொரானா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே வேலை பார்த்து வருகிறார் .அவரின் கணவரும் ஒர்க் பிரம் ஹோம் என்று பணியாற்றுகிறார்
இருவரும் வீட்டிலேயே இருப்பதால் அவர்களுக்குள் அடிக்கடி குடும்ப சண்டை ஏற்படுவது வழக்கம் .நேற்று மதியம் கணவன்-மனைவி இடையே மீண்டும் குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதனால் கணவர் வினோத்குமார் மனைவியுடன் கோபித்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார்.

பின்னர் அவர்களின் மகன், மகள் இருவரும் தரைதளத்தில் உள்ள தங்கள் தாத்தா வீட்டுக்கு சென்று விட்டனர். கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த அனிதா, வீட்டின் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார், தூக்கில் தொங்கிய அனிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.