தருமபுரி அருகே பச்சிளம் பெண் சிசு கொலை… 3-வதும் பெண்ணாக பிறந்ததால் பாட்டி வெறிச்செயல்!

 

தருமபுரி அருகே பச்சிளம் பெண் சிசு கொலை… 3-வதும் பெண்ணாக பிறந்ததால் பாட்டி வெறிச்செயல்!

தருமபுரி

தருமபுரி அருகே மகளுக்கு மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்ததால், பாலில் விஷம் வைத்து பச்சிளம் குழந்தையை கொன்ற பாட்டியை போலீசார் கைது செய்தனர்.

தருமபுரி அடுத்த மோட்டுப்பட்டியை சேர்ந்தவர் முத்துவேல். இவரது மனைவி தேன்மொழி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமடைந்த தேன்மொழிக்கு கடந்த 7 நாட்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. பின்னர், தேன்மொழி குழந்தையுடன் தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக தேன்மொழியின் தந்தை திருத்தணி சென்றிருந்த நிலையில் கடந்த 11ஆம் தேதி குழந்தை உடல் நலகுறைவால் இறந்து விட்டதாக அவருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில், வீட்டிற்கு வந்த அவர் குழந்தையை வீட்டின் அருகே புதைத்தனர்.

தருமபுரி அருகே பச்சிளம் பெண் சிசு கொலை… 3-வதும் பெண்ணாக பிறந்ததால் பாட்டி வெறிச்செயல்!

இந்த நிலையில், பிறந்து ஒரு வாரமே ஆன பெண் சிசு மர்மமான முறையில் இறந்தது குறித்து, கிராம செவிலியர் தருமபுரி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து தருமபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்ததில், குழந்தைக்கு பாலில் விஷம் வைத்துக்கொன்றது தெரிய வந்தது. இதனை அடுத்து, போலீசார் தேன்மொழி, அவரது தாயார் உமாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, தேன்மொழிக்கு 3-வதும் பெண் குழந்தை பிறந்ததால், ஆத்திரத்தில் பெண் சிசுவிற்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததை உமா ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து, உமாவை கைதுசெய்த போலீசார் அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். மேலும், இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.