தனியார் மில் பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை… மேலாளர் மீது உறவினர்கள் புகார்…

 

தனியார் மில் பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை… மேலாளர் மீது உறவினர்கள் புகார்…

கோவை

கோவையில் உள்ள தனியார் மில்லில் பணிபுரிந்த இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை சிஙகாநல்லூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான துணி மில் செயல்பட்டு வருகிறது. இங்கு புதுக்கோட்டை மாவட்டம் வேலம்பட்டி பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரது மகள்கள் சரண்யா(20) மற்றும் சாந்தி(19) ஆகியார் பணிபுரிந்து வருகின்றனர். இதற்காக நிறுவனத்தின் அருகே வாடகை வீடு எடுத்து இருவரும் தங்கி வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று பணியின்போது மில் மேலாளர் ஜெயசீலன் என்பவர் சாந்தியை சக ஊழியர்கள் முன்பாக தரக்குறைவாக பேசி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சாந்தி, தனது அறைக்கு சென்று மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தனியார் மில் பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை… மேலாளர் மீது உறவினர்கள் புகார்…

பணிமுடிந்து அறைக்கு திரும்பியபோது சாந்தி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த சரண்யா இதுகுறித்து சிங்காநல்லூர் காவல்நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து தற்கொலை சம்பவம் குறித்து மில் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள மில் மேலாளர் ஜெயசீலனை தேடி வருகின்றனர்.