ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பெண் யானை உயிரிழப்பு!

 

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பெண் யானை உயிரிழப்பு!

கோவை

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆழியார் உருலகுழி பள்ளம் பகுதியில் பெண் யானை உயிரிழந்தது.

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆழியார் உருலகுழி பள்ளம் பகுதியில் வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் சுமார் 46 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்ததை கண்டு, வனத்துமறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பெண் யானை உயிரிழப்பு!

தகவலின் பேரில், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையில், இறந்த யானைக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து பேசிய ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர், பிரேத பரிசோதனைக்கு பிறகே யானை உயிரிழப்புக்கான காரணம் குறித்து தெரிய வரும் என கூறினார்.

மேலும், யானை இயற்கையான முறையில் உயிரிழந்திருந்தால், பிற விலங்குகளுக்கு உணவாக விடப்படும் என்றும், நோய்வாய் பட்டு உயிரிழந்திருந்தால் அதே பகுதியில் குழி தோண்டி புதைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.