16 வயது சிறுமியை நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் முகவர்கள்!

 

16 வயது சிறுமியை நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் முகவர்கள்!

மதுரையில் 16 வயது சிறுமியை நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் முகவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மதுரையில் 16 வயதிற்கு உட்பட்ட சிறுமியை நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய முகவர்கள் அனார்கலி, சுமதி, சந்திரா, தங்கம், ஜெயலட்சுமி, சரவணபிரபு ஆகிய 6 பேரை ஆள் கடத்தல் மற்றும் விபச்சார தடுப்புப் பிரிவு காவல்துறை ஆய்வாளர் ஹேமமாலா தலைமையிலான காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்தனர்.

16 வயது சிறுமியை நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் முகவர்கள்!

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. மதுரை மாவட்டத்தில் பாலியல் தொழிலில் முக்கிய புள்ளிகளாக தேடப்பட்டு வந்த 5பெண் முகவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். சிறுமியிடம் கடந்த 5ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட 600க்கும் மேற்பட்ட நபர்களின் விவரங்கள் சேகரித்து தனிப்படை அமைத்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.