உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு நிதி திரட்டி கொடுத்த சக காவலர்கள்; நெகிழ வைக்கும் சம்பவம்!

 

உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு நிதி திரட்டி கொடுத்த சக காவலர்கள்; நெகிழ வைக்கும் சம்பவம்!

அரூர் அருகே உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு அவருடன் பணியாற்றிய காவலர்கள் நிதி திரட்டி கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே இருக்கும் பொய்யப்பட்டி கிராமத்தை சேர்ந்த காவலர் வெங்கட்ராமன், மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், அண்மையில் உயிரிழந்தார். இவருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர்.

உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு நிதி திரட்டி கொடுத்த சக காவலர்கள்; நெகிழ வைக்கும் சம்பவம்!

வெங்கட்ராமன் மரணித்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்த சக காவலர்கள், அவரது பிள்ளைகளின் படிப்பு செலவுக்காக நிதி திரட்டும் முயற்சியிலன் ஈடுபட்டனர். வாட்ஸ் அப், டெலிகிராம் என பல்வேறு சமூக வலைத்தளங்கள் மூலம் வெங்கட்ராமன் குடும்பத்திற்காக ரூ.12 லட்சம் நிதி திரட்டியுள்ளனர். தந்தையின்றி தவிக்கும் வெங்கட்ராமனின் பிள்ளைகளுக்கு உதவ முன்வந்தது, 2013ம் ஆண்டு வெங்கட்ராமனுடன் காவல் பயிற்சி பெற்றவர்களாம்.

இந்த நிலையில், திரட்டிய நிதியை பொய்யப்பட்டி கிராமத்துக்கு சென்று வெங்கட்ராமனின் குடும்பத்துக்கு கொடுத்த காவலர்கள், அவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.