“ஏன்டா தினம் குடிக்கிறே ,என்ன போட்டு அடிக்கிறே “அடிக்கடி குடிக்க பணம் கேட்ட மகனை ,அடியாட்கள் மூலம் பிணமாக்கிய தந்தை..

 

“ஏன்டா தினம் குடிக்கிறே ,என்ன போட்டு அடிக்கிறே  “அடிக்கடி குடிக்க பணம் கேட்ட மகனை ,அடியாட்கள் மூலம் பிணமாக்கிய தந்தை..

உல்லாசமாக ஊர் சுற்றிய மகனை ,அவன் தொல்லை பொறுக்க முடியாமல் அவரின் தந்தையே மகனை கொன்ற விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது

உத்திரபிரதேச மாநிலம் காஜியாபாத்தின் டிஃபென்ஸ் காலனியில் வசிக்கும் கமல் சந்த் தோமர் என்பவருக்கு ரிஷாப் என்ற டீனேஜ் மகனிருந்தார் ,அந்த மகன் அவரின் ஆட்டோமொபைல் ஷாப் வைத்திருக்கும் தந்தையிடம் தினம் குடிக்கவும் ,உல்லாசமாக ஊர் சுற்றவும் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்தார் .மேலும் தினம் குடித்து விட்டு வந்து தன்னுடைய தந்தையை அடிப்பதும் ,தாயின் கையை உடைப்பதுமாக இருந்துள்ளார் .

“ஏன்டா தினம் குடிக்கிறே ,என்ன போட்டு அடிக்கிறே  “அடிக்கடி குடிக்க பணம் கேட்ட மகனை ,அடியாட்கள் மூலம் பிணமாக்கிய தந்தை..
இதனால் மகனின் தொல்லை பொறுக்க முடியாமல் அவரின் தந்தை அவரை கொல்ல முடிவு செய்துள்ளார் .இதனால் தன்னுடைய நண்பர் பால் மூலம் சில அடியாட்களை 2 லட்ச ரூபாய் கொடுத்து ஏற்பாடு செய்ய சொன்னார் .ஆனால் அவர் ரிஷாபின் நண்பரை விட்டே அவரை கொல்ல முடிவு செய்துள்ளார் .அவர்களின் திட்டபடி புதன்கிழமை ரிஷபை அவரின் நண்பர் பிரமோத் சிம்போலி பகுதிக்கு அவரின் புது காரில் அழைத்து சென்றுள்ளார். அப்போது இருவரும் குடித்து போதையிலிருக்கும்போது அவரின் கழுத்தை அறுத்து பிரமோத் கொன்றுள்ளார் .
பிறகு இந்த கொலை பற்றி போலீசுக்கு தகவல் தெரிந்ததும் .போலீசார் விசாரணையில் அவரின் தந்தையே மகனை, பணம் கொடுத்து ஆட்கள் மூலம் கொன்றது தெரிய வந்து அவரை கைது செய்தனர் .

“ஏன்டா தினம் குடிக்கிறே ,என்ன போட்டு அடிக்கிறே  “அடிக்கடி குடிக்க பணம் கேட்ட மகனை ,அடியாட்கள் மூலம் பிணமாக்கிய தந்தை..